Categories: தமிழகம்

ஜல்லி, எம் சாண்ட் விலை உயருகிறது.. பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் அமல் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஜல்லி, எம் சாண்ட் விலை உயருகிறது.. பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் அமல் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிரசர்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கட்டுமான தொழிலை நம்பி செயல்படும் கிரஷர் மற்றும் குவாரிகள் தற்போது கடும் நெருக்கடியில் இருக்கிறது.

தமிழக அரசின் கனிமவளத் துறை ராயல் டி கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டணமும் இரு மடங்கு ஆகிவிட்டது. ஜி எஸ் டி துறை மூலமாக கிரசர் மற்றும் குவாரிகளுக்கு கடும் நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகளுக்கு கிரஷர் மற்றும் குவாரி தொழிலுக்கான ஆட்கள் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது. வேலை ஆட்களுக்கான கூலி உயர்வும் இரு மடங்கு ஆகிவிட்டது.

மெஷனரிக்கான உதிரிபாகங்கள் விலை உயர்வு அதிகமாகிவிட்டது லாரிகளுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் கட்டுமானத் துறைக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய கிரஷர் மற்றும் குவாரிகளில் தயாரிக்கப்படும் கட்டுமான பொருட்களை விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.

ப்ளூ மெட்டல், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் 3000 ரூபாய் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம் சாண்ட் 4000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம், பி சாண்ட் யூனிட் 5000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கனிம பொருட்களும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிரசர் மற்றும் குவாரிகளின் மூலமாக இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டுமானத்துறையினர் இந்த புதிய கட்டண உயர்வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தகவலை KCP Infra Limited நிறுவனரும், கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி நலச்சங்கத் தலைவருமான K.Chandraprakash அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் VSI சாண்ட் மூலம் தான் எம் சாண்ட் தயாரிக்கக வேண்டும் என சொல்லியுள்ளதால், VSI மெஷின் இல்லாதவர்கள் உடனடியாக ஒரு மாதத்திற்குள் அந்த மெஷினை பயன்படுத்த வேண்டும்.

எம் சாண்ட் உரிமத்தை வைத்துக் கொண்டு கிரஷர் ஆபரேட் செய்வதை நிறுத்த வேண்டும் . இது குறித்து ஏராமளான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

விலையேற்றத்தை நிலைப்படுத்த வேண்டுமென்றால், நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய வேண்டும் என்றும், எம் சாண்ட் உரிமத்தை வைத்து கொண்டு கிரஷர் ஆபரேட் செய்வது தவறு. இதை கட்டுப்படுத்தினால் மட்டுமே விலையேற்றத்தை நிலைநிறுத்த முடியும்.

விலையேற்றம் செய்ய முக்கிய காரணம், ஜிஎஸ்டியில் எல்லா கிரஷர்களுக்கு 20 முதல் 25 லட்சம் ரூபாய் அபராதம் வர வாயப்புள்ளது என்பதால் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இல்லாமல் எந்த பொருளையும் விற்பனை செய்ய வேண்டாம். அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால், ஜல்லி விலை 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

7 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

7 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

8 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

8 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

8 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

9 hours ago

This website uses cookies.