இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.இந்த தோல்வி மூலம் இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் விவாத பொருளாக மாறியுள்ளனர்.கடந்த 10 வருடமாக இருந்த கோப்பையை கைவிட்டது மட்டுமல்லாமல்,உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் செல்லும் வாய்ப்பையும் கோட்டைவிட்டது.
இந்த தொடரில் ரசிகர்களுக்கு ஒரே ஆதரவாக இருந்தது என்றால் அது பும்ராவின் மிரட்டலான பௌலிங் மட்டும் தான்,மற்றபடி அணியில் இருந்த மற்ற வீரர்கள் எதற்காக இருந்தார்கள் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
பும்ரா இந்த தொடர் முழுவதும் எதிரணியை தன்னுடைய அசத்தலான பௌலிங்கால் மிரட்டி 32 விக்கெட்களை கைப்பற்றி,தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் வாங்கினார்.
இந்த நிலையில் ஆஸி.அணியின் தொடக்க வீரரான உஷ்மான் கவாஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பும்ராவை புகழ்ந்து பேசியுள்ளார்.அதாவது ‘நான் தொடர்ந்து பும்ராவின் பந்துக்கு ஆட்டமிழந்து வந்தேன்.என்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் கடினமான பௌலர் என்று சொன்னால் நான் பும்ராவை தான் சொல்லுவேன்,மேலும் பும்ரா கடைசியில் முதுகுவலி பிரச்சனை காரணமாக விளையாடவில்லை,ஆனால் அந்த விஷயத்தை நாங்கள் சந்தோசமாக எடுத்துக்கொண்டதற்கு அவமானப்படுகிறோம்,அவர் ஆடாத காரணத்தால் எங்கள் அணி வெற்றிபெற எளிதாக இருந்தது.
இதையும் படியுங்க: பும்ரா இல்லனா இதான் கதி…வரலாற்றிலேயே படுமோசமான 2 ஓவர்கள்…ஆஸி.வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்ததா..!
இந்த மாதிரி திறமையான பவுலரிடம் சாம் கான்ஸ்டாஸ் திமிராக நடந்து கொண்டது நல்லது கிடையாது.பும்ரா எப்போது கோவப்படமாட்டார்,நல்ல குணத்தை வைத்துள்ள அவர் முகத்தில் சிரிப்போடு இருப்பார் என்று கூறினார்.
மேலும் அந்த அணியின் மற்றொரு வீரரான டிராவிஸ் ஹெட் பும்ரா கடைசி நேரத்தில் பந்து வீச வராததை பார்த்து எங்கள் அணியில் இருந்த 15 வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தோம்,அவர் மிகசிறந்த செயல்பாட்டாளர் என குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.