இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்தோடு திரையரங்கிற்குள் சென்றனர்.
பிரபலங்கள் பலரும் சென்றிருந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் காட்சியை பார்த்தார். அத்தோடு படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது.
மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது குறித்து பத்திரிகையாளரிடம் நடிகர் ஜெயம் ரவி பேசினார். அப்போது அவர் இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னுடைய படம் திரையில் வெளியாகியுள்ளது.ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களும் படத்தை வெகுவாக ரசித்து பார்த்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு சஸ்பென்ஸ் என கூறி ஜெயம் ரவி சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
This website uses cookies.