கோவை : ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யும் பொருட்டு கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.78 கோடி தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரயிலில் டி_4 பெட்டியில் கோவை செல்வபுரம் சரோஜினி நகரைச் சேர்ந்த அழகிரி என்பவர் பயணம் செய்தார்.
அவர் வைத்திருந்த பையை சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தார்
அதில் கணக்கில் வராத 3.900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க ஆபரணங்களை கோவையிலிருந்து சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது
இதைத்தொடர்ந்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அந்த ஆபரண தங்கத்தின் மொத்த மதிப்பு 1 கோடியே 78 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் ஆகும். அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு ரூபாய் 10 லட்சத்து 70 ஆயிரத்து 852 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
இதைத் தொடர்ந்து இவர் சேலம் வரி விதிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.