நெல்லை : வள்ளியூர் பிரபல நகைக்கடையில் 47 பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரபல நகைக்கடையான திருமலை ஜீவல்லரி செயல்பட்டு வருகிறது. இதனை வள்ளியூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் நடத்தி வருகிறார்.
இங்கு பணகுடி, கலந்தபனை அருகே உள்ள இராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன் – விஜயலெட்சுமி தம்பதியின் மகள் சுபா (வயது 22) என்ற இளம்பெண் விற்பனை பிரதிநிதியாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜீவல்லரியின் உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் நகை கடைக்கு சரிவர வரமுடியவில்லை. இந்நிலையில் உடல்நிலை சரியானதால் கடந்த 15ம் தேதி கடைக்கு சென்று நகைகளை ஆய்வு செய்தபோது 47 சவரன் நகைகள் மாயமானது தெரிய வந்தது.
உடனே கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது அதில் விற்பனை பிரதிநிதியான சுபா நகைகளை திருடி தனது தாயார் விஜயலெட்சுமியிடம் கொடுத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இது குறித்து ராமசந்திரன் வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஏஎஸ்.பி. உத்தரவின் பேரில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்குபதிவு செய்து விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் கடந்த 4 நாட்களாக நகைகடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மானிட்டர் பழுதாகி இருந்ததால் பழுது நீக்குவதற்காக மானிட்டரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பியுள்ளனர். மானிட்டர் இல்லாததால் சிசிடிவியில் பதிவாகாது என்று நினைத்துக்கொண்டு அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளம்பெண் சுபா நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து வள்ளியூர் போலீசார் சுபாவையும் அவரது தாயார் விஜயலெட்சுமியையும் கைது செய்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.