பழனியில் நடந்து சென்ற மூதாட்டி இடம் நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி கீழே விழுந்து தப்பி ஓடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரம் என்பவரது மனைவி சுலோச்சனா (வயது 71). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ரெணகாளியம்மன் கோவில் அருகே சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அர்ச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
அதில் ஒருவரை மட்டும் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நகைபறிப்பில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லும் போது விபத்தில் சிக்கி கீழேவிழும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த காட்சியில் நகையை பறித்துக்கோண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் செல்லும் இருவரும் முன்னால் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதி மின்கம்பத்தில் மோதி கீழே விழுவதும், விழுந்தவுடன் பலத்த காயத்துடன் இருவரும் சுலோச்சனாவிடம் இருந்து பறித்து சென்ற நகையை கீழே போட்டுவிட்டு தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.