மாநிலத்தில் சிறார்களைச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகத்தில் பரவவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
மதுரை: மதுரையைச் சேர்ந்த ஜனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (நவ.22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் செல்போனை திருடி விட்டார் என்பதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
தொடர்ந்து அவர், மனுதாரருக்கு 19 வயதாகும் நிலையில், அவர் மீது கைது செய்யப்பட்ட அன்றே 4 வழக்குகள் பொய்யாக பதியப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி, ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில், மனுதாரர் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலவையில் உள்ளதாகவும், சமுதாயத்திற்கு தொந்தரவாக மனுதாரர் செயல்பட்டு வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி காவல் துறை மற்றும் நீதித்துறைக்கு சில கருத்துகளைத் தெரிவித்தார்.
இதன்படி பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு இளைஞன் அல்லது சிறார் ஒரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டாலும், போலீசார் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்த உடனே தொடர்ச்சியாக அவர் குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறார். இதனால் ஒரு கூட்டத்தின் தலைவனாக அவர் மாறுகிறார்.
இது குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை. மாநிலத்தில் சிறார்களைச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகத்தில் பரவவில்லை. இந்த உத்தரவை தமிழக சிறைத் துறையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மதுரை சரக சிறைத் துறையின் துணை காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த அரசுப் பள்ளி ஊழியர்.. சிறார் பள்ளியில் கல்லூரி மாணவர்கள்!
மேலும், மனுதாரர் செப்டம்பர் 29ஆம் தேதியில் இருந்து சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபதனை ஜாமீன் வழங்கப்படுகிறது. இதன்படி, அவர் மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்” என்ற நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.