ஒரு நிமிடம் பதறிய ஜோதிமணி.. வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டு வாக்கு சேகரிப்பு : கரூரில் பரபரப்பு!
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, ஆத்தூர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்திற்கு செல்ல ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற ஜோதிமணி பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி, பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று, ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணி தான் பொறுப்பு வகித்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.