புதுக்கோட்டை ; ஆளுநர் பதவி தேவையில்லை என்றும், ஆளுநர் பதவியை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திராவிட கழகம் சார்பில் திராவிட மாடல் ஆட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிட கழகத்தின் பங்கேற்று பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது :- திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. இந்தியாவில் முதல் முதல்வர் ஸ்டாலின் என்ற பெயரை பெற்றுள்ளார். இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சாதனைக்கு மேல் சாதனைகளை செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். நான் முதல் முதல்வராக இருந்தால் போதாது, தமிழ்நாடு முதலாவது மாநிலமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் செயல்படுகிறார்.
ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்குத்தாடி போன்றது. ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறதோ அங்கெல்லாம் தொல்லை கொடுக்க ஒன்றிய அரசு அரசியல் ஆயுதமாக, அரசியல் கருவியாக பயன்படுத்துகின்ற முறை தவறான முறை. அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த முறை தவிர்க்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி தேவையில்லை, என்று கூறினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.