புதுக்கோட்டை ; ஆளுநர் பதவி தேவையில்லை என்றும், ஆளுநர் பதவியை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திராவிட கழகம் சார்பில் திராவிட மாடல் ஆட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிட கழகத்தின் பங்கேற்று பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது :- திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. இந்தியாவில் முதல் முதல்வர் ஸ்டாலின் என்ற பெயரை பெற்றுள்ளார். இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சாதனைக்கு மேல் சாதனைகளை செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். நான் முதல் முதல்வராக இருந்தால் போதாது, தமிழ்நாடு முதலாவது மாநிலமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் செயல்படுகிறார்.
ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்குத்தாடி போன்றது. ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறதோ அங்கெல்லாம் தொல்லை கொடுக்க ஒன்றிய அரசு அரசியல் ஆயுதமாக, அரசியல் கருவியாக பயன்படுத்துகின்ற முறை தவறான முறை. அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த முறை தவிர்க்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி தேவையில்லை, என்று கூறினார்.
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
This website uses cookies.