தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரைப்பற்றியும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக தன் யூடுப் சானலில் பல நடிகர் மற்றும் நடிகர்களை பறி பேசி வருகின்றார். அது தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அதற்காக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார் பயில்வான். இருந்தாலும் அவர் வீடியோ வெளியிடுவதை விடவில்லை. தற்போது வைரமுத்து மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பற்றி பயில்வான் பேசியதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபற்றி மணிரத்னத்திடம் கேட்டபோது, வைரமுத்துவுடன் எந்த பிரச்சனையும் இல்லை, வேறு இளம் கவிஞர்களுக்கு வாய்ப்பளிப்பதன் காரணமாகத்தான் வைரமுத்துவை பொன்னியின் செல்வன் படத்தில் பாடல்கள் எழுத அழைக்கவில்லை என்றார்.
இதைப்பற்றி சமீபத்தில் பேசிய பயில்வான் ரங்கநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெய்ஹானாவிடம் வைரமுத்து தவறாக நடந்துகொண்ட காரணத்தால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் வைரமுத்துவுடன் பணியாற்றமாட்டேன் என கூறியதாக பயில்வான் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெய்ஹானா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பயில்வான் ரங்கநாதன் நிதானத்தில் இல்லை என நினைக்கின்றேன். அவர் பேசியதில் எந்த உண்மையும் இல்லை. அவரால் தற்போது பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டிப்பாக அவர் மீது மானநஷ்ட வழக்கை தொடர்வேன். மேலும் வைரமுத்துவுடன் நான் பணியாற்றி இருக்கின்றேன். அவர் என்னிடம் பத்து அடி தள்ளி நின்று தான் பேசுவார். அப்படி இருக்கையில் பயில்வான் ரங்கநாதன் வாய் கூசாமல் இவ்வாறு பேசுவது மிகவும் தவறு என கண்டித்தார் ரெய்ஹானா.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.