கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேசமுத்திரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நேற்று அருகில் இருந்தவர்கள் நாம் இறந்துவிட்டதால் கண்ணை தோண்டி விடுவார்கள் உடலை அறுத்து விடுவார்கள் என்று சுப்பிரமணியத்தை பயமுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் யாரையோ இருசக்கர வாகனத்தில் வரவழைத்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்று மனைவியிடமும் இறந்துவிட்டால் உடலை அறுத்து கண்ணை எடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் தப்பித்து வந்து விட்டதாகவும், உடலுக்கு ஒன்றும் இல்லை அதுவே சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சுப்பிரமணி வாந்தி,மயக்கம்,வயிற்று வலி போன்றவை இருப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் 108 ஐ வரவழைத்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். சுப்பிரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் விழிப்புணர்வு இல்லாமல் இது போல் தப்பி ஓடியதால் தான் இவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இறப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.