மணலூர்பேட்டை அருகே உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் இரும்பு ராடு கொண்டு தலையில் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் நரசார் என்பவருக்கும், ஜீவகன் என்பவருக்கும் முன்னோர்களின் சொத்து பிரச்சனைகள் சம்பந்தமாக அடிக்கடி முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக அந்த ஊர் பொதுமக்கள் சார்பாகவும், முக்கியஸ்தர்கள் சார்பாகவும், முடிவு செய்து கடந்த சனிக்கிழமை அன்று சர்வேயர் மற்றும் காவல் துறையினர் மூலமும் இடம் அளப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஜீவகன் தரப்பில் முன்கூட்டியே அந்த இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக யாருடைய அனுமதியில்லாமல் பள்ளம் தோண்டியதாகவும், அந்த தோன்றிய பள்ளத்தை தடுத்து நிறுத்துவதற்காக நரசார் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி அவரது மகன் விஜய பிரதாபன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்துள்ளனர்.
அதனை மீறி பள்ளம் தோண்டி முள்வேலி அமைப்பதற்காக வேலையில் ஈடுபட்ட காரணத்தினால், அவர்கள் மூன்று பேரும் ஜீவகன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி உள்ளனர். இதில், ஆத்திரமடைந்த ஜீவகன் மகன் குமார் என்பவர் சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில், வீட்டிற்குள் இரும்பு ராடு கையில் ஏந்தியபடி ஓடி வந்து ஆக்ரோஷமாக விஜய் பிரதாபன் தலை மீது ஓங்கி இரண்டு முறை அடித்துள்ளார்.
இதில் வலியால் துடித்து ரத்தம் சொட்ட விஜய பிரதாபன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, இன்னொரு மகனான சுரேஷ் என்பவரும் ஜெயந்தி மற்றும் அவரது கணவரான நரசார் என்பவரையும் கட்டையால் படும் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் கதறி அழுது கொண்டு வலியால் துடிதுடித்துள்ளனர்.
உடனிருந்த உறவினர்களும் பயந்து கொண்டு சத்தம் போட்டு அலரி உள்ளனர்,இதனை அடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேர்களையும் உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரும்பு ராடால் அடி வாங்கிய விஜய பிரதாப்பனுக்கு தலையில் 7தையல் மருத்துவர்கள் போட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வைரல் ஆகி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.