Categories: தமிழகம்

இன்னமும் அடங்காத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை.. கட்டியணைத்தபடி தூங்கிய சிறுமி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், இருவர் முதலில் உயிரிழந்தனர். இருப்பினும், கள்ளச்சாராயத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பது அப்போது தெரியவில்லை. அதனால், அவர்களின் இறுதிச்சடங்கிற்கு வந்தவர்களும் கலாச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்த விவகாரத்தில், சுமார் 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில், அவர்களுக்கு வாந்தி மயக்கம் வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷ சாராயம் தொடர்பாக 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இடையில், இந்த கொடூரம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அதே கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணராமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உள்ளார். இந்த இளைஞரின் மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இப்போது மருமகனும் முழுபோதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார். இதில், கொடுமை என்னவென்றால் அவரது குழந்தையும் கூடவே இருந்துள்ளது. குடிபோதையில், தந்தை இருக்க அந்த பெண் குழந்தை அவருக்கு அருகிலேயே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில், அந்த போதை இளைஞரை கட்டி அணைத்தபடி அந்த சிறுமி இருந்துள்ளார். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அந்த போதை இளைஞரை எழுப்பி விசாரித்துள்ளனர். இருப்பினும், போதையின் உச்சத்தில் இருந்த அந்த இளைஞர் சரியாக எதுவும் பேசவில்லை. உணவு வாங்கி குழந்தைக்கு தரலாமா எனக் கேட்ட போதும் அதை வாங்க அந்த இளைஞர் மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் தானும் கள்ளச்சாராயம் குடித்ததாக அந்த இளைஞர் கூறி இருக்கிறார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Poorni

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

6 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

6 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

8 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

8 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

10 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

12 hours ago

This website uses cookies.