கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது தற்போது நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. ஆங்காங்கே இறந்தவர்களின் உடல் உறவினர்களால் தகனம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் கருணாபுரம் பகுதி முழுவதும் மரண ஓலத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் நாமக்கல் சேலம் புதுச்சேரி கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கலாச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர் இது குறித்து சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் ஒருபுறம் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்க மறுபுறம் சிபிசிஐடியினர் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்னும் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
குற்றவாளிகள் கொடுக்கும் தகவலின் பெயரில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். மேலும் கருணாபுரம் பகுதியில் உள்ள அனைவரது வீட்டிலுமே மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வரை 141 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஏழு பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். குறிப்பாக 20 பேர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.