மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா கருதப்படுகிறது. இது வருகிற மே மாதம் 1ஆம் தேதி துவங்கும் இந்த திருவிழாவில் அழகர் மாலை 6 மணிக்கு அழகர்கோவிலிலுள்ள தோளுக்கினியாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அதனை தொடர்ந்து மே 2 ஆம் தேதி மீண்டும் அதே மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் மே 3 ஆம் தேதி காலை 11 மணிக்கு எழுந்தருளி, அதன் பின்னர் பக்தர்கள் படையுடன் அழகர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது.
திருவிழாவின் தொடர் நிகழ்வாக, மே 4ஆம் தேதி செல்லும் வழியில் அங்குள்ள மண்டகப்படிகரையில் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து தண்ணீர்பாய்ச்சல் திருவிழாவும், கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுகிறது.
பின்னர் இறுதி வைபவம் ஆன கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பக்தர்கள் புடைசூழ மே 5 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.15 க்குள் நடைபெறவுள்ளதக அழகர்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
This website uses cookies.