கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்க திமுக தலைமையிலான கூட்டணி முடிவு செய்துள்ளதே இன்றைய அமைச்சருடனான சந்திப்பு எனக் கூறப்படுகிறது.
சென்னை: “அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்வு செய்யும் நாளில் தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்வர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதிமுக உடனான கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது” எனக் கூறியுள்ளார், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
இந்த ரேஸில் தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனும் உள்ளனர். முன்னதாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் நிச்சயமாக எம்பி ஆவார் என்றும், சுதீஷை மாநிலங்களவை எம்பி ஆக்கவும் கட்சி முடிவு செய்தது. ஆனால், நிலைமை சற்று தலைகீழானது.
இந்த நிலையில் தான், மீண்டும் ராஜ்யசபா எம்பி சீட் பற்றிய பேச்சு எழத் தொடங்கி உள்ளது. ஏனென்றால், வருகிற ஜூலை 24ஆம் தேதியுடன் ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் எம்பியாக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
அதேபோல், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது. மேலும், மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு எம்பிக்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: காதலர் தினத்தைக் கொண்டாட தயாரா? 10 படங்கள் ரிலீஸ்.. முழு லிஸ்ட் இதோ!
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்துள்ளார். எனவே, கமலுக்கு எம்பி சீட் உறுதியாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய கமல்ஹாசனை வீழ்த்தி, பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டால், கோவையில் அவர் நிற்கமாட்டார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், அந்த நேரத்தில், கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து கமல்ஹாசன் களமிறக்கப்பட்டால், போட்டி கடுமையாகும் எனவும் கூறப்படுகிறது.
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…
This website uses cookies.