விக்ரம் படத்தால் குஷியான கமல். அப்போ, அரசியலுக்கு குட்பையா.? அவரே சொன்ன பதில்.!

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியலில் களமிறங்கிய பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கமல். இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கோவையில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக அவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். பின்னர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் 3 என அவர் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வாறு சினிமாவில் பிசியாகி வரும் கமல், அரசியலுக்கு முழுக்கு போட உள்ளதாகவும் தகவல் பரவி வந்தன. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : சிறையில் இருந்தால் தான் தலைவர் என்றில்லை, சினிமாவில் இருந்தாலும் தலைவர் தான். நாங்கள் அரசியலில் எங்கள் பாதையில் சென்றுகொண்டு தான் இருக்கிறோம்.

எங்களது அரசியல் உங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம், நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலை தேர்ந்தெடுத்தேன்” எனக்கூறி அரசியலை விட்டு விலகப்போவதாக பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

5 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

6 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

7 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

7 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

7 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

8 hours ago

This website uses cookies.