விக்ரம் படத்தால் குஷியான கமல். அப்போ, அரசியலுக்கு குட்பையா.? அவரே சொன்ன பதில்.!

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியலில் களமிறங்கிய பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கமல். இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கோவையில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக அவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். பின்னர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் 3 என அவர் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வாறு சினிமாவில் பிசியாகி வரும் கமல், அரசியலுக்கு முழுக்கு போட உள்ளதாகவும் தகவல் பரவி வந்தன. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : சிறையில் இருந்தால் தான் தலைவர் என்றில்லை, சினிமாவில் இருந்தாலும் தலைவர் தான். நாங்கள் அரசியலில் எங்கள் பாதையில் சென்றுகொண்டு தான் இருக்கிறோம்.

எங்களது அரசியல் உங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம், நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலை தேர்ந்தெடுத்தேன்” எனக்கூறி அரசியலை விட்டு விலகப்போவதாக பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

34 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

37 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

1 hour ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

2 hours ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.