சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். சமூகத்தில் நடக்கும் நூதன திருட்டு சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி உடன் கூட்டணி அமைத்த எச்.வினோத், அவரை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார்.
அதிரடி, ஆக்ஷன் கதையம்சத்துடன் செம்ம மாஸாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து எச்.வினோத்துக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இது ரீமேக் படமாக இருந்தாலும், அதனை தமிழ் மக்களுக்கு பிடிக்கும் வண்ணம் எடுத்து வெற்றிவாகை சூடினார் எச்.வினோத்.
இதையடுத்து தனது அடுத்த படமான வலிமையை இயக்கும் வாய்ப்பை அளித்தார் அஜித். இப்படத்தை அஜித் ரசிகர்களுக்கு பிடித்தவாரு பக்கா ஆக்ஷன் படமாக உருவாக்கி இருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து ஏகே 61 படத்தில் பணியாற்றி வருகிறார் எச்.வினோத்.
இந்நிலையில், ஏகே 61 படத்துக்கு பின்னர் இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி உடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் உலகநாயகனை வைத்து எச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
எச்.வினோத் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கதை கூறியுள்ளார். இருவரும் மூன்று முறை சந்தித்து பேசி உள்ளனர். ரஜினிகாந்துக்கு எழுதிய அரசியல் கதையை, கமல்ஹாசனுக்கு எச்.வினோத் கூறி இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
This website uses cookies.