சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். சமூகத்தில் நடக்கும் நூதன திருட்டு சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி உடன் கூட்டணி அமைத்த எச்.வினோத், அவரை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார்.
அதிரடி, ஆக்ஷன் கதையம்சத்துடன் செம்ம மாஸாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து எச்.வினோத்துக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இது ரீமேக் படமாக இருந்தாலும், அதனை தமிழ் மக்களுக்கு பிடிக்கும் வண்ணம் எடுத்து வெற்றிவாகை சூடினார் எச்.வினோத்.
இதையடுத்து தனது அடுத்த படமான வலிமையை இயக்கும் வாய்ப்பை அளித்தார் அஜித். இப்படத்தை அஜித் ரசிகர்களுக்கு பிடித்தவாரு பக்கா ஆக்ஷன் படமாக உருவாக்கி இருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து ஏகே 61 படத்தில் பணியாற்றி வருகிறார் எச்.வினோத்.
இந்நிலையில், ஏகே 61 படத்துக்கு பின்னர் இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி உடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் உலகநாயகனை வைத்து எச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
எச்.வினோத் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கதை கூறியுள்ளார். இருவரும் மூன்று முறை சந்தித்து பேசி உள்ளனர். ரஜினிகாந்துக்கு எழுதிய அரசியல் கதையை, கமல்ஹாசனுக்கு எச்.வினோத் கூறி இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.