Categories: தமிழகம்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த பிரபல ரவுடி தினேஷ்…

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தினேஷ் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காஞ்சிபுரத்தில் கடந்த பல வருடங்களாக கொலை, அடிதடி ,கட்டப்பஞ்சாயத்து ,ஆள் கடத்தல் சாராயம் விற்பனை போன்ற பல குற்ற செயல்களை செய்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல தாதா என பெயரெடுத்த ஸ்ரீதர் கடந்த சில வருடம் முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாதா ஸ்ரீதர் மறைவுக்குப் பின்னர் காஞ்சி நகரை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் தாதா ஸ்ரீதரிடம் கார் டிரைவராக பணியாற்றிய தினேஷ் என்பவருக்கும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா என்பவருக்கும் கடும் போட்டி நிலவியது.

இதன் காரணமாக 2 தரப்பிலும் 20க்கும் மேற்பட்ட கொலை ,ஆள் கடத்தல் ,அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வெடி குண்டு வீச்சுகள், துப்பாக்கி முனையில் மிரட்டல் போன்ற பலவிதமான செயல்களில் தினேஷ் ஈடுபட்டு ஸ்ரீதருக்கு பின்னர் தான் தான் காஞ்சிபுரம் தாதா என பெயர் எடுத்து வந்தான். தினேஷுக்கு பின்புலமாக பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தியாகு, வெடிகுண்டு நிபுணன் சேக்காதர் , பிரபல ரவுடி படப்பை குணா உள்ளிட்ட பலர் பக்கபலமாக இருந்தனர்.

காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளுடன் தினேஷ் கைகோர்த்துக் கொண்டு பல குற்றச் செயல்கள் செய்து காவல்துறையினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருந்தான். தினேஷ் சை காவல்துறையினர் பிடிக்கும் போதெல்லாம் காவல்துறையில் உள்ள பலருக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து விட்டு தன் மீது எந்தவிதமான அடியும், ஸ்ட்ராங்கான வழக்குகளும் பதிவு பண்ணாத வாறு நடந்து கொண்டான்.

கடந்த வருடம் தினேஷ் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் கோவா மாநிலத்தில் வைத்து காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர். ஸ்ட்ராங்கான வழக்குகள் பதிவு செய்யாததால் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தை உடைத்து கொண்டு வெளியே வந்த தினேஷ் தியாகு ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்துகொண்டு தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டிருந்தது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

அதேபோல் பிரபல ரவுடி படப்பை குணாவும் காவல் துறையினருக்கு மிகப் பெரும் தலைவலியாக இருந்து வந்தான். இவர்களின் கொட்டத்தை அடக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அயல் பணி பெற்று காஞ்சிபுரத்திற்க்கு வந்தார். அதனால் கதிகலங்கிப் போன பல ரவுடிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் தலைமறைவாகி விட்டனர். ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் ரவுடிகளை வேட்டையாடி வந்தனர்.

மேலும் தினேஷ், தியாகு ,படப்பை குணா போன்ற ரவுடிகளை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டது அவர்களுக்கு தெரியவந்ததால், பல ரவுடிகள் வெளிமாநிலத்திலும், சில ரவுடிகள் வெளிநாட்டுக்கும் தப்பி ஓடி ஒளிந்து கொண்டிருந்தனர். இதில் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி தியாகுவை டில்லியிலிருந்து பின் தொடர்ந்து சென்று துப்பாக்கிமுனையில் கைது செய்து காஞ்சிபுரம் கொண்டுவந்து சிறையில் அடைத்து குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபல ஏ ப்ளஸ் நிலை ரவுடி படப்பை குணாவும் காவல்துறையினரின் கைகளில் சிக்கினால் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு சரணடைந்தார். இதையெல்லாம் கவனித்து வந்த தினேஷ், காவல்துறையினரின் கைகளில் சிக்க கூடாது என்ற எண்ணத்தில் இத்தனை நாளாக பதுங்கி இருந்து யாருக்கும் தெரியாமல் இன்று சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ஒன்பதில் மாஜிஸ்ட்ரேட் மோகனாம்பாள் முன்னிலையில் சரணடைந்தான்.

இதைப்பற்றி காவல்துறையினர் கூறுகையில், “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை கண்டு தலைமறைவாக உள்ளனர். இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள வெள்ளத்துரை அவர்களிடம் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளனர். சில நாட்களில் போலீஸ் கஸ்டடியில் இவர்களை எடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளது என தெரிவித்தனர்.

KavinKumar

Recent Posts

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கல் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

6 minutes ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

48 minutes ago

வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…

1 hour ago

அம்பேத்கரை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு குட்டு.. ஒரு மாதம் தான் கெடு : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…

2 hours ago

அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…

இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

2 hours ago

VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..

அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…

3 hours ago

This website uses cookies.