Categories: தமிழகம்

மி.மீ அளவு பெய்த மழைக்கே தாக்கு பிடிக்காத படப்பை ஊராட்சி… மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகிறதோ..? சமூக ஆர்வலர்கள் வேதனை..!!

மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழையையே தாங்க முடியாத படப்பை ஊராட்சி மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகின்றது என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் வாலாஜாபாத் 6 வழி சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கனரக வாகனங்களும், கார்களும் நாள்தோறும் சென்று வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதியாகவும் விளங்கும் படப்பை ஊராட்சியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வண்டலூர் நெடுஞ்சாலையில் படப்பை அருகே பாலம் கட்டும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடைபெற்று வருவதால், தினந்தோறும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடனே பயணம் செலுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மில்லி மீட்டர் அளவிலேயே பெய்த சிறிதளவு மழையின் காரணமாக படப்பை கடைவீதியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக சுமார் 150 மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையில் மழை தண்ணீர் தேங்கி வெளியேற வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த சாலை வழியே வண்டலூர் செங்கல்பட்டு, திருச்சி, தாம்பரம், சென்னை மார்க்கமாக செல்லுகின்ற அனைத்து வாகனங்களும் இந்த தேங்கி நிற்கும் மழை நீரில் நீந்தியபடியே செல்கின்ற அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த சாலை வழியே கனரக வாகனங்கள் செல்லும்போது, பாதசாரிகள், இருசக்கர வானத்தில் செல்பவர்கள் ,சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் என அனைவர் மீதும் சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் உடைகளின் மீது பட்டு அவர்கள் மன சஞ்சலத்துக்கு ஆளாகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ள, திமுக கட்சியை சேர்ந்த படப்பை மனோகரனின் வீடும் படப்பை நகரில் தான் உள்ளது. தேங்கியுள்ள மழை தண்ணீரில் மக்கள் கடும் சிரமத்துடன் பயணம் செய்வதை படப்பை மனோகரன் கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

மேலும் சாலையின் நடுவில் அங்கங்கே பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் மற்றும் படப்பை பேரூராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மில்லி மீட்டர் அளவே பெய்த மழையின் காரணமாக படப்பை பஜாரில் அரைஅடி தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளது . வருகின்ற மழைக்காலத்தில் இது போன்ற பிரச்சனையை ஊராட்சி நிர்வாகம் எப்படி சமாளிக்க போகின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

11 minutes ago

பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் உட்காருவதும் ஒன்ணுதான் : பரபரப்பை கிளப்பிய திமுக பேச்சாளர்!

பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…

47 minutes ago

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

2 hours ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

3 hours ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

3 hours ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

3 hours ago

This website uses cookies.