Categories: தமிழகம்

தவறான சிகிச்சையால் இளைஞருக்கு கால் அகற்றம்..? பிரபல தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

திருப்பூர் : காங்கேயம் அருகே தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் இளைஞருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவரது கால் நீக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் வயது (21) இவருக்கு கடந்த 24ம் தேதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வலது காலில் காயமடைந்த அஜித்குமார் காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் (சூர்யா மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது ஒரு வாரம் கடந்த நிலையில் காலில் மிகவும் வலி எடுத்துள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது கால் அழுகிய நிலையில் உள்ளதாகவும்,

காலை எடுத்தால் மட்டுமே மேலும் பரவுவதை தடுக்க முடியும் என கூறியதையடுத்து கால் அகற்றப்பட்டது. இதை அறிந்த அவரது உறவினர்கள் இன்று காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள சூர்யா மருத்துவமனை முன்பாக திரண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் காவல்துறையினர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினர். இதில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். காங்கேயத்தில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனை முற்றுகை இட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

KavinKumar

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

2 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

2 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

3 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

3 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

3 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

4 hours ago

This website uses cookies.