கன்னியாகுமரி அருகே கனமழையின் போது ஓடையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. வில்லுக்குறி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், நேற்று மாலை கொட்டும் மழையில் பள்ளிக்கு சென்று தாய் ஜோஸ்பின் உடன், வீடு திரும்பிய 2ம் வகுப்பு படிக்கு 7வயது சிறுவன் ஆஷிக், சாலை எது ஓடை எது என தெரியாமல் நடந்து சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக மழைநீர் ஓடையில் தவறி விழுந்து மூழ்கி மாயமானார்.
தாய் அலறி சத்தம் போட்ட நிலையில், அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தீவிரமாக தேடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தின் அடியில் சிக்கியிருந்த அந்த சிறுவனை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி சென்று தாயுடன் வீடு திரும்பிய சிறுவன் ஓடையில் தவறி விழுந்து மாயமாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.