கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியைச் சார்ந்தவர் பாலமுத்து. இவர் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கணேஷ் என்பவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன் கணேஷை, தந்தை பாலமுத்து குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகன் கணேஷ் தந்தை பாலமுத்துவை கத்தியால் தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார் தப்பி ஓடிய கணேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.