கன்னியாகுமரி ; கன்னியாகுமரி அருகே அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கிய ஊழியரிடம் பில் கேட்டு வாக்குவாதத்தில் ஆட்டோ டிரைவர் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியில் இயங்கி வருகிறது அரசு மதுபான கடை இந்த கடையில் விற்பனை செய்யும் மது பாட்டில் ஒன்றிற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் இந்த மதுபான கடைக்கு ஆட்டோ டிரைவர் மது வாங்க சென்றுள்ளார். அப்போது, 130 ரூபாய் குவாட்டர் பாட்டில் ஒன்றிற்கு ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து 140 ரூபாயாக வாங்கியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததோடு, அந்த பாட்டிலுக்கு பில் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டோ டிரைவர் வீடியோ பதிவு செய்வதை கண்டு உஷாரான மதுக்கடை ஊழியர்கள், ‘பில் கேட்க நீ அதிகாரியா..? இல்ல போலீசா..?’ என்று பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நீ ரவுடியா எங்களிடம் மிரட்டி பணம் கேட்கிறாயா..’ என்று பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பில் கொடுக்காமல் கூடுதல் விலைக்கு மது பானத்தை விற்பனை செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது.
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.