கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த திருடன் செய்த செயலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடந்த 21ம் தேதி ஒரே நாளில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் அரங்கேறியது. இந்த திருட்டு குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று குளச்சல் வெள்ளியாக்குளம் திரிசூல இசக்கியம்மன் கோவிலில் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த திருடன், கோவிலில் இருந்த திரிசூலத்தை எடுத்து உண்டியலை உடைத்துள்ளார். அப்போது, உண்டியலில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த திருடன் சோகத்துடன் அங்கிருந்து மீண்டும் சுவர் ஏறி குதித்து நடையை கட்டியுள்ளார்.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குளச்சல் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.