தஞ்சை காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அதில் அவர்கள் தஞ்சை சிங்கபெருமாள் கோவில் குளம் வடகரை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரின் மகன் சூரியபிரகாஷ் (24), காந்திபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அஜித்குமார் (25) என்பதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.