கோவை ; கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் குறித்து புகார் அளித்ததால், அவர்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதி எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் வசித்து வருபவர்கள் வீரலட்சுமி. வீரலட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், சில நேரங்களில் அங்கு வருபவர்களிடம் இளைஞர்கள் பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பொறுப்பில்லாத தமிழக அரசு… இன்னும் ஒரு வாரம் தான் கெடு ; அதுக்குள்ள… ஜிகே வாசன் விடுத்த எச்சரிக்கை
இந்நிலையில் வீரலட்சுமியின் மகன்களை சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் வழிமறைத்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரலட்சுமி புகார் அளித்திருந்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்பனை செய்யும் அந்த இளைஞர்கள் வீரலட்சுமியையும், அவரது இரண்டு மகன்களையும் மிரட்டியுள்ளனர். இதனால், இருதரப்பிற்கு அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர். மேலும், கடந்த ஏப்ரல் மாதம் வீரலட்சுமியின் இல்லத்திற்கு ஆயுதங்களுடன் சென்ற இளைஞர்கள் வீரலட்சுமியின் குடும்பத்தினரை தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வீரலட்சுமி குடும்பத்தாரும் சுதாரித்து கொண்டதால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
எனினும் தொடர்ந்து அக்கும்பல் தொடர்ந்து வீரலட்சுமி யின் இல்லத்தை நோட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வீரலட்சுமி மனு அளித்துள்ளார்.
மேலும் அந்த இளைஞர்கள் ஆயுதங்களுடன் வீட்டை நோட்டமிடும் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.