சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் அருகே பல வருடங்களாக மளிகை கடை வைத்து நடத்தி வந்த கடையின் உரிமையாளர் கஞ்சா போதை ஆசாமிகளால் படுபயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் என்ற பகுதியில் சுமார் 30 வருடங்களாக சிவஞானம் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அனைவரிடமும் நட்புடன் பழகும் சிவஞானம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
சிவஞானம் மளிகை கடை வியாபாரம் செய்து கொண்டே ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, இவருடைய கடைக்கு அருகே பாஸ்ட் புட் கடை வைத்து நடத்தும் சரவணன் என்பவர் கஞ்சா போதையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சிவஞானத்தை வம்புக்கு இழுத்தனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மளிகை கடையில் இருந்த கத்தியை சரவணன் எடுத்து சிவஞானத்தை திடீரென தாக்க தொடங்கினர். இதில் நிலைகுலைந்து போன சிவஞானம் தப்பி ஓட முயன்று உள்ளார். அப்போது, சரவணன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் சேர்ந்து பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதில், தடுமாறி கீழே விழுந்த சிவஞானத்தை சரவணன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தலை மற்றும் முகத்தில் கடுமையாக வெட்டியனர். அதில் படுகாயம் அடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். சம்பவத்தை அறிந்த தாலுக்கா காவல்துறையினர் விரைந்து வந்து சிவஞானத்தின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவஞானத்தை வெட்டி படுகொலை செய்த ராஜகுளம் பகுதியை சேர்ந்த சரவணன், ஆபேல் மற்றும் ஐயப்பன் ஆகிய மூவரும் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு சரணடைந்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்டபோது, நிலப் பிரச்சனை காரணமாக சரவணன் உள்ளிட்ட நபர்கள் சேர்ந்து சிவஞானத்தை வெட்டி படுகொலை செய்ததாகவும், சரவணன் மீது ஏற்கனவே இரண்டு மூன்று வழக்குகள் உள்ளது எனவும் தெரிவித்தனர்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடையின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.