கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அவரது தாயின் தகாத உறவு காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்துள்ள காயக்கரையை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது மாமன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. துணிக் கடையில் வேலை பார்த்து வந்த அந்த இளம்பெண், சில நாட்களில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர், நாகர்கோவிலில் ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது கணவரையும் பிரிந்த அந்த இளம்பெண், மணலிகரையைச் சேர்ந்த ஆத்து கோணம் சுனில் என்பவருடன் காட்டாத்துறை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அவர்களுடன் முதல் கணவர் மூலம் பிறந்த 11 வயது சிறுமியும் வசித்து வந்தார். அந்தச் சிறுமியிடம் அவரது தாய் இல்லாத நேரத்தில் சுனில் தவறாக நடந்து உள்ளார். இளம்பெண் வேலைக்குச் சென்றதும் வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை 3 நாட்களாக சுனில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இதனை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இருப்பினும், உடலில் வலி எடுத்ததால் சுனிலின் பாலியல் தொந்தரவு குறித்து தனது பாட்டியிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதுகுறித்து அவரது பாட்டி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை தேடி வருகின்றனர்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
This website uses cookies.