கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணி (70). இவர் மண்வெட்டி தயாரித்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் வில்லுக்குறி பகுதியில் விற்பனையை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்புவதற்காக வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, குமாரகோயில் பகுதியை சேர்ந்த ஜெனிஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மணி மீது வேகமாக மோதியது. இதில் மணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், இருசக்கர வாகனமும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதனால், தீப்பொறி கிளம்பிய நிலையில், ஜெனிஷ் ஐ இழுத்தபடி பல அடி தூரம் சென்று பைக் நின்றது.
இதில், ஜெனிஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில்…
சினிமா நடிகர்னா பணக்காரங்களா? சினிமா என்பது ஒரு மாய வலை. சினிமாவில் ஒரே இரவில் உச்சத்திற்கு போவனர்களும் உண்டு ஒரே…
சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையும் படியுங்க: இந்த பாலா…
நிறைவேறாத கூட்டணி பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும்…
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி…
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
This website uses cookies.