கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணி (70). இவர் மண்வெட்டி தயாரித்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் வில்லுக்குறி பகுதியில் விற்பனையை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்புவதற்காக வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, குமாரகோயில் பகுதியை சேர்ந்த ஜெனிஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மணி மீது வேகமாக மோதியது. இதில் மணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், இருசக்கர வாகனமும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதனால், தீப்பொறி கிளம்பிய நிலையில், ஜெனிஷ் ஐ இழுத்தபடி பல அடி தூரம் சென்று பைக் நின்றது.
இதில், ஜெனிஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.