கன்னியாகுமரி : குளச்சல் நகராட்சியில் போட்டி திமுக உறுப்பினர் பதவியேற்க ஆதரவாக செயல்பட்ட குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏவின் கொடும்பாவியை திமுகவினர் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் நகராட்சியை திமுக மீனவ வேட்பாளரன ஜான்சன் சார்லஸ் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுக போட்டி வேட்பாளர் நசீர் என்பவர் பாஜக மற்றும் அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். 24 வார்டுகள் உள்ள குளச்சல் நகராட்சியில் இருவரும் 12 வார்டுகள் வீதம் பெறவே, குலுக்கல் மூலம் நசீர் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில், நசீர் தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு ஆதரவாக செயல்பட்ட குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸை கண்டித்தும் குளச்சலில் மீனவ மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது எம்எல்ஏ பிரின்ஸின் கொடும்பாவியை எரித்து கடலில் வீச மீனவர்கள் முயன்றனர். இதனை போலீசார் தடுத்த நிலையில், அந்த பகுதியில் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.