கன்னியாகுமரி: குறும்பனையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் கடல் சீற்றத்தால் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ததேயூஷ் மகஷ். இவர் பைபர் படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இன்று அதிகாலை வழக்கம் போல் யூஜின் என்பவரின் பைபர் படகில் 5 மீனவர்களாக குறும்பனை கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால், பைபர் படகில் இருந்த ததேயூஷ் மகேஷ் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில், படகும் அவர் மீது மோதியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த மகேஷ் கடலில் மூழ்கவே சக மீனவர்கள் அவரை உடனடியாக மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து குளச்சல் கடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.