கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக இரண்டு பெண்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அந்த பகுதியில் உள்ள கடைகளை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, இரணியல் சாலையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த கடைகளின் உரிமையாளர்கள் குளோரி மற்றும் விலாஷினி ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 10 கிலோ நச்சு புகையிலைகளை பறிமுதல் செய்ததோடு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.