கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே குடியிருப்புகளுக்குள் உலா வரும் கருங்குரங்கு ஒன்று பொதுமக்களிடம் நட்பு பாராட்டி வரும் சம்பவம் நெகிழச் செய்துள்ளது.
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக ஒரு கருங்குரங்கு குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது. அந்த குரங்கு மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்ததாக தெரிகிறது.
வழக்கமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் குரங்குகள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது, மரங்களில் உள்ள காய், கனிகளை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும். அவற்றை விரட்ட முயன்றால் கடிக்க விரட்டுவதும் என பல விதங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும்.
ஆனால், இந்த கருங்குரங்கு அவற்றுக்கு நேர்மாறாக பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் அன்பாக பழகி வருகிறது. அந்த பகுதி மக்களும் பழங்கள், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி அந்த குரங்கிடம் பாசம் காட்டி வருகின்றனர்.
பொதுமக்களோடு அன்பாக பழகும் இந்த விசித்திர கருங்குரங்கு யாராவது ‘செல்பி’ எடுக்க சென்றால் அசராமல் போஸ் கொடுக்கிறது. இதனால், குரங்குடன் ‘செல்பி’ எடுத்து அந்த பகுதி வாலிபர்களும், சிறுவர்களும் குதூகலம் அடைகிறார்கள்.
சமீபகாலமாக அந்த பகுதி சிறுவர், சிறுமிகளின் உற்ற நண்பனாக மாறிய கருங்குரங்கு அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து உலா வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.