Categories: தமிழகம்

அய்யோ.. உசுரு போயிருச்சே.. குளிக்க சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி பலி; கதறி அழுத நண்பர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பொறியியல் கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி பலி நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் குளத்தின் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் சுமார் 6-மணி நேர தேடுதலுக்கு பின் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றி குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனில் (19) இவர் தாய் தந்தையை இழந்த நிலையில், உறவினர்கள் உதவியால் மார்த்தாண்டம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் உள்ள சக வகுப்பு மாணவன் வினித்ராஜ் வீட்டிற்கு வந்த பெனில் அருகே உள்ள கரையாக்குளத்திற்கு சக நண்பர்கள் 5-பேருடன் குளிக்க சென்றுள்ளார்.

சக நண்பர்களுடன் உற்சாகமாக குளித்த பெனில் குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி செல்ல முயன்றுள்ளார். குளத்தின் நடுபகுதிக்கு சென்ற அவர் மூச்சு திணறி நீந்த முடியாததால் திடீரென நடு குளத்தில் மூழ்கி மாயமானார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 10-பேர் ரப்பர் மிதவைகளின் உதவியுடன் கம்பால் குளத்தில் மாயமான பெனிலை தேட தொடங்கினர். சுமார் 6-மணி நேர தேடுதலுக்கு பின் அவரை சடலமாக மீட்டு கரை சேர்த்த நிலையில், சடலத்தை கைப்பற்றிய குளச்சல் போலீசார் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் தந்தையை இழந்த கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

1 hour ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

3 hours ago

This website uses cookies.