திருக்கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி மாட வீதியில் புதியதாக போடப்பட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில் முருகர் தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோவிலின் நான்கு மாட வீதியில் 15 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக காங்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றது. குறிப்பாக திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய திருவிழாவான 7ம் நாள் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மர தேரில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
புதியதாக போடப்பட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலையின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தற்போது முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகர் தேரின் வடத்தை பிடித்து நான்கு மாட வீதியில் உலா வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும், இன்று இரவு விநாயகர் உற்சவம் நடைபெற்று நாளை அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.