தமிழகம்

வாந்தி எடுத்த சீமான்.. அடுத்த 4 நாட்களில்.. ஆனால் ‘அது’ இல்லை.. கரு.அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

பிரபாகரனுடன் சீமான் புகைப்படம் எடுத்தது உண்மைதான், ஆனால் இது கிராஃபிக்ஸ் போட்டோ என கரு.அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும், அதனை எடிட் செய்து கொடுத்ததே தான் என்றும் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பூதாகரமான நிலையில், இது தொடர்பாக பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரனின் அண்ணன் மகனான மனோகரன், எல்லாளன் திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் சீமான் – பிரபாகரன் சந்திப்பு குறித்து பேசியது விவாதத்தைக் கிளப்பியது.

அதேநேரம், சீமானும் இதற்கு தொடர்ந்து பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அறியப்படும் கரு.அண்ணாமலை, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து உள்ளார்.

அதில், “சீமான் ஈழத்துக்குச் சென்றது உண்மை. ஆனால், பல நாட்கள் காத்திருந்து பிரபாகரனை பார்க்க சீமான் முயன்றார். அனுமதி மறுக்கப்பட்டதால், கொளத்தூர் மணி மூலமாக அவரைச் சந்தித்தார். பிரபாகரன் உடன் சீமான் புகைப்படம் எடுத்தது உண்மை. ஆனால், அது இந்தப் போட்டோ இல்லை. இது கிராஃபிக்ஸ்.

தமிழகத்தில் இருந்து பிரபாகரனைச் சந்திக்கச் சென்ற தலைவர்கள் பலர், படகில் சென்றனர். ஆனால், சீமான் அப்படி படகில் செல்லவில்லை. இரண்டு முறை கோடியக்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு பயண ஏற்பாடு செய்த நிலையில், வாந்தி வந்ததால் அவ்வாறு செல்லவில்லை.

எனவே, பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சீமான் சென்றார். மற்றவர்களை அழைத்தது விடுதலைப் புலிகள். ஆனால், சீமானை அழைத்தது விடுதலைப் புலிகளின் கிளையான கலை பண்பாட்டுத்துறை தான். அதன் பொறுப்பாளரான சேரலாதன் அழைப்பின் பேரில் தான் சீமான் சென்றார்.

இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்தவர் வன்னி அரசு. அங்கு சென்றும் பிரபாகரனைப் பார்க்க முடியாத நிலையில், கொளத்தூர் மணியைத் தொடர்பு கொண்டு பேசி, அதன் மூலம் பிரபாகரனைச் சந்திக்க வாய்ப்பு பெற்றார். இந்தச் சந்திப்பு நடந்ததும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.

அப்போது, சீமான் பிரபாகரன் உடன் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர், அந்த போட்டோ கிடைக்குமா, அதை வாங்கிக்கொடு என சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் கேட்டார். அப்போது, ஈழப்போர் முடிவை நெருங்கி விட்டது. மேலும், போராளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர்.

இதையும் படிங்க: மாடுகளை விற்று மாடர்ன் டாய்லெட்.. உட்ரா வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு.. சீர்காழி கல்யாண ராணி சிக்கியது எப்படி?

இனி போட்டோ கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறினேன். கிராபிக்ஸ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் சீமானிடம் சொன்னேன். அவ்வாறு சொன்ன நான்காவது நாளில் கிராஃபிக்ஸ் செய்த போலியான போட்டோவை வெளியிட்டார் சீமான்.

இதனையடுத்து, இயக்குநர் களஞ்சியத்திடம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகைப்படம் போலி எனக் கூறினேன். இது கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட போலியான போட்டோ என்பது களஞ்சியத்துக்குத் தெரியும். இப்போது மூன்று நாட்களுக்கு முன்பும் குறுஞ்செய்தியில் களஞ்சியத்திடம் சொன்னேன். ஆனால், அதற்குப் பதில் இல்லை. பணம் ஒன்று தான் சீமானுக்கு ஒரே குறிக்கோள். சங்ககிரி ராஜ்குமார் சொன்னதும் உண்மை தான்” என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.