Categories: தமிழகம்

கருணாநிதியால் கச்சத்தீவு போயிடுச்சு… இப்போ காவிரியை தாரை வார்க்க CM ஸ்டாலின் முயற்சி : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தனியார் அமைப்பின் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மதுரையில் நூலகம் வேண்டும் என மக்கள் யாரும் கேட்கவில்ல. மதுரையில் மேம்பாலம், குடிநீர், சாலை வசதி வேண்டும் மக்கள் கேட்கிறார்கள்.

அதிமுக ஆட்சி காலத்தில் மதுரைக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது, ஜல்லிக்கட்டு வாடிவாசல் என்பது மண் வாசனை நிறைந்தது, ஆனால் ஜல்லிகட்டு மைதானம் எதற்காக கட்டி வருகிறார்கள் என தெரியவில்லை.

நூலகம் கட்ட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அத்தியாவசிய திட்டங்கள் முதலில் செய்ய வேண்டும், தமிழகத்தில் காய்கறிகள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

தக்காளி, வெங்காயகம் இல்லாமல் பெண்கள் வீடுகளில் குழம்பு வைக்க முடியவில்லை, காய்கறி உள்ளிட்ட விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், முதல்வர் செயலற்று முடங்கி போய் உள்ளார், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது, மு.க.ஸ்டாலின் ராஜ்ஜியத்தில் மக்களுக்கு பூஜ்யம் தான் கிடைத்து இருக்கிறது.

தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்கிறார்கள், டிஐஜி விஜயகுமார் கடும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

அதிமுக ஆட்சியில் சட்ட போராட்டம் நடத்தி காவிரி உரிமை நிலைநாட்டி இருக்கிறார், கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்ததது போல காவிரியை ஸ்டாலின் தாரை வார்க்க பார்க்கிறார்.

காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக எந்தவொரு நடவடிக்கைகள் எடுக்கவில்லை, அமைச்சர் பொன்முடி வழக்கில் 10 ஆண்டுகள் வாய்தா வாங்கினார்.

திடீரென வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டு உள்ளார். பொன்முடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்பி உள்ளது, அமலாக்கத்துறை சோதனையை பொன்முடி சட்டப்படியாக எதிர்க்கொள்ள வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பொன்முடி தெரிந்து கொள்ள வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் என்பதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமுமில்லை, எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் என்பதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தி உள்ளது.

நிர்வாகம், வளர்ச்சி, திட்டங்களில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது, அதிமுக ஆட்சி தொலைநோக்கு பார்வையுடன் நடைபெற்றது என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

1 hour ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

2 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

3 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

3 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

4 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

4 hours ago

This website uses cookies.