கரூர் : மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள ஆர்சம்பட்டியை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (66). கடந்த 11-01-21- ல் பாலியல் கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனயும், 100 ரூபாய் அபராதம் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார்.
பாலியல் தொல்லைக்கு உட்பட்ட அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு தமிழக அரசு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.