கரூரில் பட்டபகலில் கடையின் உரிமையாளர் தனியாக இருந்த போது பேக் வாங்குவது போல் அவரது கவனத்தை திசை திருப்பி கைப்பையை 2 இளைஞர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் திருச்சி சாலையில் அமேசான் ஸ்டோர் என்ற பெயரில் பேக் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் எபிநேசன் (72). நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் இவர் கடையில் அமர்ந்திருந்த போது சுமார் 25 வயது மதிக்கதக்க 2 இளைஞர்கள் டிராவல் பேக் வேண்டும் என கேட்டு கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது ஒரு இளைஞர் உரிமையாளரின் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொள்ள, மற்றொரு இளைஞர் டிராவல் பேக் பார்த்து கொண்டிருந்துள்ளார். சில பேக்குகளை பார்த்த பிறகு தங்களுக்கு பேக் வேண்டாம் என கூறி விட்டு சென்று விட்டனர். கடையின் உரிமையாளர் மதியம் வீட்டிற்கு சாப்பிட செல்வதற்காக தான் எடுத்து வந்த கைப்பையை தேடியுள்ளார்.
தனது இருக்கையின் அருகில் இருந்த அந்த கைப்பை மாயமாகியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடையினுள் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்த போது, மதியம் 2 மணியளவில் கடைக்கு வந்த 2 இளைஞர்களில் ஒரு இளைஞர் இவர் டிராவல் பேக் காண்பித்துக் கொண்டிருந்த போது, கைப்பையை எடுத்து தான் எடுத்து வந்த பைக்குள் போட்டுக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக எபிநேசர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கடையினுள் நுழைத்து இளைஇளைஞர்கள் 2 பேர் கைப்பையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
This website uses cookies.