கரூரில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, வாங்கல் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை மரம் பயிரிட்டுள்ளார். அதில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்த 2500 வாழைமரங்கள் பாதியோடு முறிந்து விழுந்தது.
இன்னும் ஒரு மாத காலத்தில் வாழைதார் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் தாருடன் வாழை மரம் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பலரும் வாழை விவசாயத்தை கைவிட்ட நிலையில், ஒரு சில விவசாயிகள் மட்டும் இப்பகுதியில் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அவர்கள் கூறியதாவது :- உரம், யூரியா விலையை குறைக்க வேண்டும். உரம் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை விவசாயத்திற்கு ஈடுபடுத்த வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடி வரும் சூழ்நிலையில், அதற்கு காரணம் அந்த அரசாங்கம் திடீரென்று இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதுதான்.
உரம், யூரியா போன்ற பொருட்களை இறக்குமதி செய்தால், அந்நியச் செலாவணி போய்விடும் என்பதால் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். திடீரென்று இயற்கை விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில், உணவு பற்றாக்குறை தற்பொழுது இலங்கை நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு, மாநில அரசு உரம் விலை ஏற்றம் ஆள் பற்றாக்குறை இயற்கை பாதிப்பு இதே போன்ற சூழ்நிலை விவசாயத்தை புறக்கணித்தால் உணவுப் பஞ்சம் இங்கும் ஏற்படும் என்று அப்பொழுது தெரிவித்தார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.