கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாததால் தீயணைப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரந்தோறும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புகலூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு உள்ளே வந்துள்ளார்.
தேவராஜ் மனு அளிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மருத்துவர் என்பதால், அவரை பரிசோதித்து மருத்துவமனைக்கு அனுப்புமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதல் உதவி தருவதற்கான ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாததால், நெஞ்சு வலியால் அவதிப்பட்ட தேவராஜ் தீயணைப்பு துறை வாகன மூலம், கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் நிலையில், ஆயிரம் கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவது வழக்கம். இப்படியிருக்கையில், ஒரு ஆம்புலன்ஸ் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாமல், தீயணைப்பு துறை வாகனத்தில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அஏற்றி சென்ற சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.