கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், தான் செய்த திட்டங்கள் குறித்து மட்டும் பேசி விட்டு நழுவி சென்றார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம், இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு உறுதிமொழி வாசித்தார்.
ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எம்.பி அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கூறியதாவது :- கடந்த தேர்தலின் போது பெற்ற வெற்றியை விட இந்த தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றி பெறுவோம். 1,750 நாட்களில் 972 நாட்கள் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் களப்பணி ஆற்றியுள்ளேன். 300 நாட்கள் மற்ற பகுதிகளில் வேலை செய்துள்ளேன்.
மேலும், 300 நாட்கள் நாடாளுமன்றத்தில் கரூர் தொகுதி, தமிழ்நாட்டு மற்றும் இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளேன். பாஜகவின்
பீ-டீமாக கரூரிலும், தமிழகம் முழுவதும் அதிமுக செயல்படுகிறது, எனக் குற்றம்சாட்டிய ஜோதிமணி, திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.
மேலும், அண்ணாமலை மற்றும் ராகுல்காந்தி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.