கரூர் மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அண்ணாமலை நடைபயண பிளக்ஸ் பேனர் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் “என் மண் – என் மக்கள்” நடை பயண பிரச்சார பேனர் வைக்கப்பட்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் தொடர்ந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் இதுவரை அகற்றாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி மேயர் கவிதா கணேசன் வாட்ஸ் அப் வழியாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார்.
இதன் காரணமாக திருமாநிலையூர் ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை நடைப்பயண பிரச்சார பிளக்ஸ் பேனர் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் இறப்புக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனரும் அகற்றப்பட்டது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.