கரூர் : கரூரில் செய்யாத பணியினை செய்ததாக கூறி பணம் பெற்று விட்டு தற்போது அந்த ஊழலை மறைக்க மீண்டும் பணிகள் ஜரூராக நடந்து வருவதாக அதிமுகவினர் மாவட்ட ஆடசியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் Sankaranand Infra , Contractor Karur என்ற கட்டுமான நிறுவனம் கரூர் நெடுஞ்சாலை துறையில் பல இடங்களில் சாலை பராமரிப்பு டெண்டர் எடுத்து அந்த பணியை செய்யாமலேயே செய்ததாக கூறி கரூர் நெடுஞ்சாலை துறை Divisional Engineer சத்திய பாமா அவர்களின் துணையுடன் அரசு பணத்தை கொள்ளையடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஊழல் சம்பவம் தொடர்பாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதாரப்பூர்வமாக கடந்த 05.04.2022 அன்று விரிவான விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி , கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தார். மேலும் அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுலவலர் அவர்களிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் இதை தெரிந்து கொண்டு எப்படியாவது இந்த ஊழல் சம்பவத்தில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கரூர் நெடுஞ்சாலை துறை Divisional Engineer அவர்களின் உதவியோடு , Sankaranand Infra , Contractor Karur என்ற நிறுவனம் சாலை பராமரிப்பு வேலைகளை விசாரனையில் உள்ள சம்மந்தப்பட்ட இடங்களில் செய்து வருகின்றனர் .
எனவே பராமரிப்பு வேலைகளை நிறுத்த சொல்லி 06.04.2022 அன்று புகார் மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அவர்களிடம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருவிகா அவர்கள் மனு அளித்து இருந்தார். ஆனால் , புகார் மனு நிலுவையில் உள்ள போது ஊழல் சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள தடயங்களை அளித்து வருகின்றனர். அதனால் மேற்கண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அவர்களிடம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் அதிமுகவினர் மனு அளித்தார்.
உடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுப்பிரமணி, கரூர் ஊராட்சி மன்ற ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன், கரூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா சுப்பராயன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன், 11 வது வார்டு கவுன்சிலர் ஆண்டாள் தினேஷ் குமார், வழக்கறிஞர் கரிகாலன், அதிமுக நிர்வாகிகள் அருண் தங்கவேல், ஆயில் ரமேஷ், நீலிமேடு பிரபாகரன், கராத்தே ராமதாஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
This website uses cookies.