கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் லாரி நேருக்கு நேர் மோதி இருவர் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச் சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் செல்வதற்கு திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து அரியலூர் பகுதிக்கு சாக்கு பை ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், மாடு வாங்க வந்த சரவணன், மாரியப்பன் சம்பவ இடத்தில் பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.