Categories: தமிழகம்

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கனஅடியாக உயர்வு… ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், காவிரி ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவை மேட்டூர் அணை எட்டையதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் நேற்று மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீருடன் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெய்த மழைநீருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று மதியம் 12 மணி அளவில் இந்த தண்ணீரில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று கொண்டுள்ளது. கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மதியம் 12 மணியளவில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கதவணியில் வரும் மொத்த நீரையும் 93 மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்காதவாறு தடுப்பு வேலி அமைத்தும், முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீர்வரத்து அதிகரித்து கொண்டிருப்பதால் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

41 minutes ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

2 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

2 hours ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

3 hours ago

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…

4 hours ago

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

19 hours ago

This website uses cookies.