கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை என கரூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் திட்டக்குழு தலைவர் புலம்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணதாசன் தலைமையில் ஊரகப் பகுதிகளில் ஆறு பேரும், நகர்ப்புறங்களில் நான்கு பேர் என 11 உறுப்பினர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்தபின் பேசிய திட்ட குழு தலைவர் கண்ணதாசன், கரூர் மாவட்ட நிர்வாகம் ஊரகப் பகுதிகளில் மக்கள் திட்டங்களை செயல்படுத்த கட்சி பாகுபாடு பார்க்காமல் நிதி ஒதுக்க வேண்டும். டெண்டர்களை வெளியிட வேண்டும். ராஜ்ய சபா உறுப்பினர் நிதி வழங்கப்பட்டும், பணி ஆணையை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்றும் புலம்பினார்.
அதனைத் தொடர்ந்து, அவரிடம் பேசிய திட்ட இயக்குனர் வாணீஸ்வரி, மாவட்ட நிர்வாகம் போதிய நிதி ஆதாரங்களை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், இருந்தாலும் தங்கள் கோரிக்கையை பரிசீலனையில் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.