கரூரில் கல்லூரி மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்துள்ள ஆத்தூர் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் நிர்வாகம் ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அந்த பாலிடெக்னிக்கில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வரும் நிலையில், அங்குள்ள ஒரு மாணவரை அதே பாலிடெக்னிக் கல்லூரியின் ஆசிரியர் செக்ஸ் டார்ச்சர் செய்த சம்பவம் தற்போது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பாலிடெக்னிக் கல்லூரியானது கடந்த பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், இந்த கல்லூரியின் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட்டில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றுபவர் மனோகரன். இவர், இதே துறையில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் சிறுநீர் கழிக்க சென்ற போது, செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அந்த மாணவர் வேண்டாம், வேண்டாம் என்று கூற, ஒரு நிமிடம் தான் என்று கூறி ஆசிரியர் செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தினை அடுத்து ஆண் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா ? என்று கூறி அந்த கல்லூரியின் மாணவர்கள் மற்றும் அந்த பகுதியினை சார்ந்த இளைஞர்கள் ஆகியோர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் டூ ஈரோடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இந்த திடீர் சாலைமறியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் கரூர் நகர காவல்துறையினர் விரைந்து அப்பகுதிக்கு வந்து போராட்டத்தினை கைவிடக்கோரி பேச்சுவார்த்தைக்கு முற்பட்ட போது, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாணவர் சமுதாயம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கல்லூரி மாணவிகள் அதிக அளவில் செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாகி வரும் நிலையில், ஆண் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்று ஒட்டுமொத்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல், தமிழக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.