கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரை அடுத்த மண்மங்களம் அருகில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கிரீன் பார்க் நீட் கோசிங் செண்டர் செயல்பட்டு வருகிறது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்து ரயில்வே பீடர் ரோட்டில் வசிக்கும் வாசுமணியின் 17 வயது மகள் தர்ஷினி விடுதியில் தங்கி நீட் கோச்சிங் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாணவி கழிவறைக்கு சென்ற போது தோழியிடம் பேசிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை விடுதி காப்பாளர்கள் பேபி, கோகிலா ஆகியோர் திட்டியுள்ளனர். மேலும், மாணவியின் தந்தையிடம் உங்கள் அதிகமாக பேசுகிறாள் என்றும், அதனால் வந்து அழைத்துச் செல்லும்படி பள்ளியின் தாளாளர் சுப்பிரமணி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று மதியம் 12.45 மணியளவில் பள்ளியின் 2 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இடது கால், தலை, வாய், காது ஆகிய இடங்களில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிர்வாகம் சார்பில் கார் மூலம் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.